மன்னாரில் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள்!
சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 175 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஒன்றுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று (18) கைது செய்துள்ளனர்.
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளைபீட கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 33 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காலைப்பாடு, உதயபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதாகினர்.
சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.