பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடக ஆர்வலரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை முட்டுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாக 28 வயது சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி;-
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில், இன்று (02.04.22) கைது செய்யப்பட்டுள்ளார் என காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, மோதரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.