ஆபாச வீடியோக்களை வெளியிட்டும், பேசியும் வரும் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கண்டனங்கள் கிளம்பி உள்ளன. டிக்டாக் தொடக்கத்தில், ரவுடிபேபி சூர்யா, திவ்யாவுக்கு அடுத்தபடியாக, மக்களிடம் பிரபலமானவர் திருச்சி சாதனா.
இவர்களில் ஆபாச பேச்சும், அருவருப்பான சொற்களையும் பேசி வீடியோ வெளியிட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் திருச்சி சாதனா.
டிக்டாக் முடக்கத்திற்கு பிறகு, தனியாகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இதற்கு கிட்டத்தட்ட 192 k சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள்.
அன்றாடம் தான் செய்யும் வேலைகள், உட்பட அனைத்தையுமே வீடியோவாக இவர் பதிவிட்டு வருகிறார்.
அதேசமயம், சாதனாவின் சில வீடியோக்கள் எல்லைமீறி இருப்பதாகவும், புகார்களும் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.
யூ டியூபில் எப்படியாவது பணத்தை அள்ளலாம் என்ற ஆசையில் அரைகுறை ஆடையில் ஆபாச சைகைகளை காட்டி 18+ வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருபவர் திருச்சி சாதனா.
அண்மையில் எப்படி குளிக்க வேண்டும் என்ற தலைப்பில், ஆடையுடன் குளிக்கிறார் திருச்சி சாதனா.
இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் அந்த வீடியோ இதுவரை நீக்கப்படவில்லை.
பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களின் பொழுதுபோக்கு தளமாக மாறியுள்ள யூடியூபில் இப்படியான வீடியோக்களை வருவது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆபாசம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார்கள் அடிக்கடி குவிகின்றன.
அந்த வகையில் ரவுடி பேபி சூர்யா, சிக்கா, திவ்யா, சுகந்தி என பலர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகின்றனர்.