பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று (29) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த யு.ஜி.எஸ்.சசங்க வயது 25 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொறியியல் பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை இந்த நாட்களில் இடம்பெற்று வருகின்றது.
இறுதி வினாத்தாளில் மாணவன் விடையளிக்கத் தவறியதையடுத்து, அவரது நண்பர்கள் அவரைத் தேடியபோது, அவரது கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மாணவன் தங்கியிருந்த சேனக பிபிலே விடுதியில் , நண்பர்கள் இருவர் சென்று பார்த்தபோது தனது அறையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவருடைய அறையில் உள்ள மேஜையில், மன்னிக்கவும், இந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. என் சாவுக்கு யாரும் காரணமில்லை. மாணவன் எழுதிய கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.